ஆர்.கே.ஜி. என்கிற ராம் கார்த்திக் சென்னையில் பிறந்தவர். கனடாவின் கன்கார்டியா பல்கலைக்கழகத்தில் 2013ஆம் ஆண்டு பொறியியல் முதுகலைப்பட்டம் முடித்த பின், உற்பத்தி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் நாவலான ‘பாடுவான் நகரம்’, யாவரும் பதிப்பகத்தின் மூலம் 2020ல் வெளியானது.

நீரின் கைகள்

நீரின் கைகள் மனம் உடல் வாக்கு என்று அனைத்தையும் சுத்தப்படுத்தும் நீரின் கைகளை என் முன்னோர்கள் நம்பி வந்தார்கள். காட்டிலும் மலையிலும் பதுங்கி நின்ற பன்றிக் குட்டிகளை மாய்த்து மாலையில் எதோ ஒரு நதியின் கரையில் அமர்ந்தபடி பயத்துடன் இறந்து வீழ்ந்த அந்த பன்றியின் கண்களை நீரில் பார்த்தபடி அவர்கள் அசைப்போட்டார்கள். உண்மையில் அக்காலம் பசிக்கும் – பண்பிற்கும் விடை சொல்ல முடியாத ஒரு காலம். எப்படியோ அந்த காலத்தில் எளிதாக மந்திரத்தில் நீர் சுத்தமானது. சுத்த…