ஆச்சிப் பாட்டியின் Autopsy
/ எப்படி பொதுவுடைமை ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டதோ, அன்பும் கொண்டாடப்பட்டது என்று சொல்லும் காலத்தில் தான் நாம் இருக்கிறோம். அந்த காலத்தைச் சேர்ந்தவள் என் ஆச்சிப் பாட்டி. / பாட்டிக்கு பொதுவுடைமை தெரியாது. அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவள் சமைத்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியலை குறிப்பாக, பாத்திரத்தின் விளிம்பிலும் அடியிலும் ஒட்டிக் கிடக்கும் அந்த எண்ணெய் மிதக்கும் நறுநற கத்திரிக்காயை அவள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் என்பதே. / வாய்ப்பு அமைந்து, எல்லோரும் சாப்பிட்ட பின் ஏதேனும்…
