மூன்றாம் கண்
இட பாகம் முழுதும் தந்தும்
சிவனை எதிர் நின்று
நெற்றியில் முத்தமிடவே
ஆசைப்படுகிறாள்
உமா
நெற்றிக் கண்ணின் சூட்டில்
சிவந்த இதழ்கள் பொசுங்கும் வரை
-ஆர். கே. ஜி.
அந்தரங்கமாக
ஆடைகளை அகற்றி
சிவனின் கண்களை
தன் கைகளால் மூடினாள் அவள்
மூன்றாம் கண்ணால்
சிவன் விடாமல் பார்க்க
செய்வதறியாமல் தவித்தாள்
– காளிதாசன், குமார சம்பவம்